மைத்திரி- ரணில் அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியுள்ளது. 30/1 தீர்மானத்திற்கு அப்போதைய அமைச்சரவையின் அங்கிகாரம் பெறப்பட்வில்லை. இலங்கை நாடாளுமன்றத்திலும் அந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவில்லை, அது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலும் அந்தத் தீர்மானத்துக்குக் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தனது உரையில் கூறியுள்ளார்.
30/1 தீர்மானம் இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடக்க முடியாதவை. அத்துடன் இலங்கை மக்களின் இறைமையை மீறுவதாகவும் அமைந்துள்ளதென அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.
மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்வதற்கு, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை அமைப்பத்து விசாரணை நடத்தியதாகவும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் விசாரணைகள் செய்யப்படுமெனவும் புதிய அரசாங்கத்தின் கொள்கையை கருத்திற்கொண்டு கடந்த காலத்தின் சில பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கும் அந்த விசாரணைக் ஆணைக்குழு சில விடயங்களை முன்மொழியுமெனவும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.