ஐந்து ஆண்டுகாலத் திட்டமாக இந்த ஆய்வு இடம்பெற்று வரும் நிலையில், கொழும்புத் தெற்கு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பாக இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் செய்துள்ள இந்தக் கூட்டு உறவு ஒப்பந்தத்தில், 51 வீத உரிமை கொழும்புத் துறைமுக அதிகார சபைக்குரியதென உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டுறவு ஒப்பந்தத்தின் பிரகாரம் மூன்று நாடுகளும் கொழும்புத் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக ஆராயலாமெனவும் தேவையான விடயங்களை பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் கூறப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பாரிய கொள்கலன் செயற்பாடுகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதற்குரிய முறையில் அபிவிருத்திகள் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாணைகளுக்கு மேலதிகமான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இந்தியத் தேசியப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொலிஸ் அதிகாரி அலோக் மிட்டல் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.
அவருடன் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலரும் வருகை தந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களத் தகவல்கள் கூறுகின்றன.
அலோக் மிட்டல், தென்னிந்தியாவில் ஐ .எஸ் இஸ்லாமியவாதிகள் தொடர்பான விசாரணைகளை நடத்தியதுடன், தாக்குதல்களையும் தடுத்தும் நிறுத்தியவர்.
இவர் தலைமையிலான குழுவினர் இலங்கையில் விசாரணை நடத்தி இந்திய இலங்கை அரசுகளுக்குத் தகவல்களை பரிமாறவுள்ளதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.