நிலைமாறா இலங்கை ஒற்றையாட்சியில் நிலைமாறு கால நீதி சாத்தியமா?

ஜெனீவாவை நோக்கிய தமிழர் தரப்பின் "கண்மூடிப் பூனை" அரசியல்

ஐ. நா.வில் அடுத்த கட்டத்தை நோக்கி ஈழத்தமிழர் எவ்வாறு கூர்ப்படையலாம்?
பதிப்பு: 2020 டிச. 16 17:20
புதுப்பிப்பு: மார்ச் 19 03:53
Cat closed eyes
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இயங்கும் ஐ.நா. மனித உரிமைச் சபையில், ஒபாமாவின் காலத்து அமெரிக்க அரசினால், மேற்குலகின் இதர பத்து நாடுகளின் அனுசரணையுடன், மைத்திரி-ரணில் அரசாங்கத்துடன் இணைந்த வகையில் மொத்தம் பன்னிரண்டு நாடுகளால் 2015 ஒக்ரோபரில் முன்வைக்கப்பட்டதே முப்பது/ஒன்று (30/1) என்ற தீர்மானம். சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம் அமெரிக்காவும் இலங்கையும் கருத்தொருமித்த கட்டமைப்பு (consensual framework) என்று அழைக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்குள் சாதித்திருக்கவேண்டியவற்றை மைத்திரி-ரணில் அரசு செய்துமுடிக்கத் தவறியதால் 2017 ஆம் ஆண்டு மார்ச்சில் ஒரு முறையும் (34/1), 2019 மார்ச்சில் ஒரு முறையுமாக (40/1) ஏற்கனவே இரு முறை ரொல்-ஓவர் (roll-over) முறையில் இது நீடிக்கப்பட்டிருந்தது.
 
இரண்டுதரப்புகளும் இழைத்த போர்க்குற்றங்களில் இருந்து நிலை மாறுகால நீதிக்கான (transitional justice) ஒரு நிலை போரின் முடிவினால் இலங்கைத் தீவில் தோன்றியுள்ளதென்றும், போரின் முடிவே (அதாவது முடித்துவைப்பே) பிணக்கின் முடிவென்றும் (post-conflict situation) ஆகவே இரண்டு தரப்புகளும் இழைத்த போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுடன் (accountability) முன்னோக்கிப் பயணிப்பதே நல்லிணக்கமென்றும் (reconciliation) வல்லாதிக்க சக்திகள் சொல்லிவைத்த பொல்லா இணக்கப் பொறிமுறையே இந்தப் பால்

இதற்கிடையில், 2018 இல், ட்றம்பின் நிர்வாகத்தில் முப்பது/ஒன்றைக் கொண்டுவந்த அமெரிக்காவே மனித உரிமைச் சபையிலிருந்து முழுமையாக விலகிவிட்டது.

அடுத்த இரண்டு வருடங்களுக்குள், அதாவது 2020 இன் ஆரம்பத்தில், ராஜபக்ச அரசு இந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசின் இணை ஆதரவுக்குச் சாவு மணி அடிக்க முன்னரே, நடைமுறையில், இந்தத் தீர்மானம் செத்து உக்கிப் போய்விட்டிருந்தது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை 2015 இல் பிறக்கும் போதே எதுவித பலனும் செய்ய முடியாத ஒன்றாகச் செத்துப் பிறந்த தீர்மானமே முப்பது/ஒன்று.

செத்தே பிறந்து, மீண்டும் செத்து, ஆறு வருடங்களாக உழுத்துப்போன முப்பது/ஒன்றை மீண்டும் "ரொல்-ஓவர்" செய்யுமாறு வேண்டுவதில் என்ன பயன்?

திருட்டுப் பூனை கண்ணை மூடிப் பாலைக் குடிப்பதைப் போல, உண்மை என்ன என்று தெரிந்திருந்தும், தெரியாதது போல் நீதிக்கான போராட்டத்தை மறந்து, தமிழர் தம் உரிமைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வீணடிப்பில் தொடர்ந்தும் ஈடுபடுவதா?

இதற்குப் பதிலாக, 2021 மார்ச்சில் மனித உரிமைச் சபை மேற்கொள்ளவேண்டிய அடுத்த நகர்வு என்ன என்பது தொடர்பாகத் தமிழர் தரப்பு முன்வைக்கவேண்டிய நிலைப்பாடு எதுவாக இருக்கவேண்டும் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

2015 இற்கும் 2021 இற்கும் இடையான நீர்த்துப்போகச் செய்தலுக்குப் பின்னான அரசியலில் ஆறு வருடங்கள் என்பது நீண்ட ஒரு காலம். இக்காலத்துக்குள் சர்வதேச மனித உரிமைப் பரப்பில் வேறு விடயங்கள் முக்கியத்துவம் பெறவும், இலங்கைத் தீவுக்குள்ளேயே 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், பின்னர் 2020 இல் உலக இடரான கோவிட் போன்ற இதர அவலங்களும் மேலெழுந்து, கடந்துபோன 2009 வரையான ஈழ இன அழிப்புப் போருக்குரிய சர்வதேச நீதியின் முக்கியத்துவத்தை மேலும் காலாவதியாகச் செய்துள்ளன.

ஆக, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் உத்தியைச் சரியாகக் கையாள்வதில் தமிழர் தரப்பு தவறிவிட்டது.

இந்த நிலையில், சர்வதேச நீதியை நீர்த்துப்போகச் செய்யும் அரசியலுக்கு ஆரம்பத்திலேயே "கண்மூடிப் பூனைகளாக" ஒத்துழைத்த தமிழர் தரப்புகள் எவை என்பதை மீட்டிப்பார்ப்பதும், தற்போதைய சூழலில் அவர்களுக்கிருக்கும் பொறுப்புக்கூறல் பற்றியும், புதிய தரப்புகளாக தற்போது புறப்பட்டிருக்கும் புதிய கண்மூடிப் பூனைகள் யார், அவர்களின் கண்கட்டி வித்தைகள் தான் என்ன என்பதை மக்கள் மட்டத்தில் இருப்போர் அறிந்து கொள்வதும் முக்கியமாகிறது.

பழைய பூனைகளும், புதிய பூனைகளும் தெரிந்தும் தெரியாதது போல் கண்மூடிக்கொண்டு எந்தப் பாலை ஜெனீவாவில் குடித்தார்கள், மீண்டும் குடிக்க விழைகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டாலே அவர்களோடு சேர்ந்து மக்கள் தரப்பினரும் கண்மூடிக்கொள்ளாமல் உள்ளாரச் சிந்தித்துச் செயற்படலாம்; வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்காமல் விழித்துக்கொள்ளலாம்; புதிய வழியை உருவாக்கலாம்.

குற்றங்களுக்கெல்லாம் குற்றம் அல்லது குற்றங்களுட் பெருங்குற்றம் (The Crime of All Crimes) என்று வரையறுக்கப்படுவது இன அழிப்பு (Genocide).

இதை ஆறு பத்தாண்டுகளுக்கும் மேலாக, வேறு வேறு வடிவங்களில் இலங்கை ஒற்றையாட்சி அரச இயந்திரம் செய்துவருகிறது என்பது ஈழத் தமிழ்த்தேசத் தரப்பின் தொடர் குற்றச்சாட்டு.

1956 ஆம் ஆண்டு தந்தை எஸ்.ஜே.வி. செல்வாவின் தலைமையில் தமிழரசுக் கட்சியின் இணை நிறுவனரும் அக்கட்சியின் அப்போதைய மூளையாகவும் கருதப்பட்ட வ. நவரத்தினம் அவர்கள் எழுதிய திருகோணமலைத் தீர்மானத்தில் இன அழிப்பு என்பது முதன்முறை சுட்டிக்காட்டப்படுகிறது.

இதற்கு முன்னரும் தமிழ்த்தேசியத் தரப்பின் தீர்மானங்களில் அல்லது கொள்கை வகுப்பு ஆவணங்களில் எங்கேனும் இன அழிப்பு என்ற பதம் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது ஆராயப்படவேண்டியது. ஆனால், குறைந்த பட்சமாக 1956 ஆம் ஆண்டுத் திருகோணமலைத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டாலே, 2021 வரை இந்தத் தொடர் குற்றச்சாட்டுக்கு 65 கால வரலாறு இருக்கிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன்-சம்பந்தன் அணியும் பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் உலகத்தமிழர் பேரவை (GTF) எனும் அமைப்பும் அதனோடு அணிசேர்ந்து வேறு சில நாடுகளில் இருந்து செயற்படும் சிலரும் சுமந்திரன்-சம்பந்தன் அணியை வழிமொழிந்து, மங்கள சமரவீர, ஜெயம்பதி விக்கிரமரட்ணா போன்ற சிங்கள அரசியல்வாதிகளை 2013 இல் சிங்கப்பூரில் சந்தித்தனர்

அது மட்டுமல்ல, 2009 இற்குப் பின்னரும் இந்தப் பெருங்குற்றம் புதிய வடிவங்களில் பெருவிருட்சமாகித் தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையையே நிரந்தரமாகச் சிதைத்துவிடும் வகையிற் தொடர்கிறது.

ஆக, குற்றங்களின் குற்றத்துக்கு நீதிகோருவதே தலையான கடமையாக இருக்கவேண்டிய இடத்தில், ஐ.நா.மனித உரிமைப் பொறிமுறைக்குள் திட்டமிட்ட வகையில் இன அழிப்பு என்ற குற்றம் எடுத்துக்கொள்ளப்படாது போனதென்பது ஆபத்தான ஒரு சர்வதேசப் பொறி மட்டுமல்ல, ஆழமான சர்வதேசச் சதியும் கூட!

இதை மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தில் ஈடுபடாமலும், அதற்காகக் குரல் கொடுக்காமலும், வேறு குற்றங்களையே குற்றம் என்று சர்வதேச தரப்புகள் வரையறுத்த போது, அந்த வரையறைகளுக்குள்ளேயே தம்மை வலைப்படுத்திக்கொண்ட தமிழர் தரப்புகள், குறிப்பாக சிங்கப்பூருக்கும் தென்னாபிரிக்காவுக்கும் ஜெனீவாவுக்கும் படையெடுத்தன. இவையே இங்கு குறிப்பிடப்படும் பூனைகள்.

சிங்கப்பூருக்குப் பிறகு இந்தப் பூனைகள் ஜெனீவாவில் குடித்த பால் எத்தகையது?

இரண்டுதரப்புகளும் இழைத்த போர்க்குற்றங்களில் இருந்து நிலை மாறுகால நீதிக்கான (transitional justice) ஒரு நிலை போரின் முடிவினால் இலங்கைத் தீவில் தோன்றியுள்ளதென்றும், போரின் முடிவே (அதாவது முடித்துவைப்பே) பிணக்கின் முடிவென்றும் (post-conflict situation), ஆகவே இரண்டு தரப்புகளும் இழைத்த போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுடன் (accountability) முன்னோக்கிப் பயணிப்பதே நல்லிணக்கமென்றும் (reconciliation) வல்லாதிக்க சக்திகள் சொல்லிவைத்த பொல்லா இணக்கப் பொறிமுறையே இந்தப் பால்.

இதுவே 2015 இல் தமிழர்களுக்குத் தரப்பட்ட முப்பது/ஒன்று (30/1) என்ற இன அழிப்பு நீதிக்கெதிரான தற்கொலை மருந்துப்பால்.

இதைத் தமிழர் தரப்பு அருந்துவற்கு ஏது செய்த பூனைகள் ஒரு வகையின. தெரிந்தே குடித்த பூனைகள் இன்னொரு வகையின. புரியாது வாய்வைத்த பூனைகள் மூன்றாவது வகையின. எல்லாப் பூனைகளையும் அவற்றின் தன்மைகளையும் ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கு அல்ல. முதலாவது வகையை மட்டும் இங்கு பார்ப்போம்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சுமந்திரன்-சம்பந்தன் அணியும் பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் உலகத்தமிழர் பேரவை (GTF) எனும் அமைப்பும் அதனோடு அணிசேர்ந்து வேறு சில நாடுகளில் இருந்து செயற்படும் சிலரும் சுமந்திரன்-சம்பந்தன் அணியை வழிமொழிந்து மங்கள சமரவீர, ஜெயம்பதி விக்கிரமரட்ணா போன்ற சிங்கள அரசியல்வாதிகளை 2013 இல் சிங்கப்பூரில் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பு மேற்குலகின் ஆட்சிமாற்ற அரசியலுக்கான முன்னோடி முயற்சியாக இருந்தது. இதை நடைமுறையில் செயற்படுத்தியது தென்னாபிரிக்கக் குழு ஒன்று. இந்தச் சிங்கப்பூர்ச் சந்திப்பில் பத்து அம்சங்களில் "உடன்பாடு" காணப்பட்டது. சிங்கப்பூர்க் கோட்பாடுகள் (Singapore principles) என்று அவற்றுக்குப் பெயரும் இடப்பட்டது. அந்தப் பத்து விடயங்களையும் உற்று நோக்கினாலே அவற்றின் பின்னால் இருக்கும் தமிழ்த் தேசிய நீக்க அரசியலின் சூட்சுமம் தெளிவாகப் புரியும். அவை வருமாறு:

    1. In describing the nature of the State what is important is the substance; the labels are secondary.

    2. The Constitution shall be based on basic constitutional principles and values including sovereignty of the people, participatory democracy and supremacy of the Constitution which shall form an unalterable basic structure.

    3. Power sharing shall be on the basis of self-rule and shared-rule within an undivided Sri Lanka.

    4. The Executive Presidency shall be abolished and the form of government shall be Parliamentary.

    5. The pluralist character of Sri Lankan society as well as identities and aspirations of the constituent peoples of Sri Lanka shall be constitutionally recognised.

    6. There shall be a strong and enforceable Bill of Rights consistent with universally accepted norms and standards.

    7. There shall be a separation of powers and an independence of judiciary which includes a Constitutional Court.

    8. Important institutions shall be independent and accountable. Appointments to these and High Posts shall be through a transparent mechanism that provides for a national consensus, example Constitutional Council.

    9. Institutions of the State shall reflect the pluralist character of Sri Lankan society.

    10. The Republic of Sri Lanka shall be a secular state. The Foremost place to Buddhism and equal status to other religions shall be assured.

ஒற்றையாட்சி என்ற பெயரற்ற, அதேவேளை சமஷ்டி என்ற பெயரும் அற்ற, பெயரளவில் இரண்டும் கெட்டான் ஆனால் நடைமுறையில் ஒற்றையாட்சி, அதாவது "ஐக்கிய ராஜ்ஜிய" என்று பின்னாளில் வரையப்பட்ட அரசியல் யாப்பில் அவர்கள் போட்டுக்கொண்டதற்கான முன்னோடி; பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதில் இயைந்து போதல்; ஜனாதிபதி ஆட்சியை விட பாராளுமன்ற ஆட்சியைப் பலப்படுத்தல் போன்ற தென்னிலங்கைக்கும் சர்வதேசத் தலையீட்டுக்கும் சாதகமான விடயங்களே சிங்கப்பூர் தீர்மானத்தில் முக்கியம் பெற்றன.

ஈழத்தமிழர்கள் இன அழிப்பின் விளைவுகளில் இருந்து மீளுவது பற்றியோ, அரசியற்தீர்வு பற்றியோ எதுவித தெளிவான வரையறைகளும் இல்லாத ஒன்றாகவும், வேறு எதுவித பேரம்பேசலும் அற்றவையாகவும் சிங்கப்பூர் கோட்பாடுகள் அமைந்தன.

2020 இல் கோட்டபாய அரசு ஜெனீவாத் தீர்மான இணை ஆதரவில் (co-sponsorship) இருந்து வெளியேறிய போது மங்கள சமரவீர போன்றவர்கள் வெளியிட்ட கருத்துகளை உற்றுநோக்கினாலே இத் தீர்மானத்தின் உண்மை நோக்கம் தெரியவரும். அதாவது, சர்வதேச விசாரணைச் சிக்கலில் மாட்ட இருந்த இலங்கை அரசையும் அதன் முப்படைகளையும் மதிநுட்பமாக மீட்டெடுக்க ஐ.நா. மனித உரிமைச் சபையுடனும் சர்வதேச சமூகத்துடனும் தாம் இயைந்து சென்ற "சாதனையை" அவர் நியாயப்படுத்திய முறையில் இருந்தே நோக்கத்தை மட்டுமல்ல, தீர்மானத்தின் உள்நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம்

நடைமுறையில் தமிழர் தரப்பின் திம்புக் கோட்பாட்டை மீண்டும் மறுதலிக்கும் நகர்வே சிங்கப்பூர் கோட்பாடு.

இந்த ஓட்டத்திற்கு இயைவாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கொண்டுவரப்பட்ட 2015 ஜெனீவாத் தீர்மானம் அமைந்தது.

2020 இல் கோட்டபாய அரசு ஜெனீவாத் தீர்மான இணை ஆதரவில் (co-sponsorship) இருந்து வெளியேறிய போது மங்கள சமரவீர போன்றவர்கள் வெளியிட்ட கருத்துகளை உற்றுநோக்கினாலே இத் தீர்மானத்தின் உண்மை நோக்கம் தெரியவரும். அதாவது, சர்வதேச விசாரணைச் சிக்கலில் மாட்ட இருந்த இலங்கை அரசையும் அதன் முப்படைகளையும் மதிநுட்பமாகமவும் கௌரவமாகவும் மீட்டெடுக்க ஐ.நா. மனித உரிமைச் சபையுடனும் சர்வதேச சமூகத்துடனும் தாம் இயைந்து சென்ற "சாதனையை" அவர் நியாயப்படுத்திய முறையில் இருந்தே, நோக்கத்தை மட்டுமல்ல, தீர்மானத்தின் உள்நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இன அழிப்புக்கான நீதி என்பதைக் கைவிட்டும் சுயநிர்ணய உரிமைக்கான நியாயப்பாட்டை மறைமுகமாகவேனும் அங்கீகரிக்காதும் கொண்டுவரப்படுகின்ற ஜெனீவாத் தீர்மானங்கள் எவையும் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கறிக்குதவாத ஏட்டுச் சுரைக்காய்களே.

போர்க்குற்றம், மனித குலத்துக்கெதிரான குற்றம் என்ற அணுகுமுறைகளுக்கு மட்டும் இடமளிக்கும் வகையில், அல்லது அவ்வாறு மட்டுப்படுத்தப்படும் வகையில், ஈழத்தமிழர் தமது கோரிக்கையை முன்வைக்கும் போது, அல்லது முடக்கப்படும் போது அதற்கு இயைந்து போவது, இரண்டு தரப்புகளின் குற்றம் என்ற அச்சாணியில் இருந்தே எமது சிக்கலைச் சர்வதேச சமூகம் கையாள வேண்டும் என்பதற்கே அடிகோலும்.

தொடர்ந்தும் தங்குதடையின்றி தமிழர் தேசம் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பை இலங்கை ஒற்றையாட்சி அரசும் சிங்கள பௌத்த பேரினவாதமும் தொடர்வதற்கான சூழ்நிலைக்கே இது வழிவகுக்கும்.

வெகுசனங்கள் மீதான அட்டூழியக் குற்றங்கள் (Mass atrocity crimes) என்று புதிய முகடு இட்டு, அதற்குள் போர்க்குற்றம் (War Crimes), மானுடத்திற்கெதிரான குற்றம் (Crimes against humanity), இனச் சுத்திகரிப்பு (Ethnic cleansing), இன அழிப்பு (Genocide) ஆகிய நான்கு குற்றங்களை உப குற்றங்களாக்கி, அவை அனைத்துக்கும் ஒன்றாகச் சேர்த்து நீதி கேளுங்கள். தனியே இன அழிப்பு என்று கேட்டால் ஒன்றும் கிடைக்காது என்ற கருத்தை மேற்குலக சக்திகள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடம் ஒரு மிதவாதப் போக்காக விதைத்துவிட்டிருக்கின்றன.

வெகுசனங்கள் மீதான அட்டூழியக் குற்றங்கள் என்பதற்குள் இன அழிப்பும் வருகிறது என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை, அல்லது வேண்டுமென்றே புரிய மறுக்கிறார்கள். அது என்னவென்றால், குற்றங்களின் குற்றமான இன அழிப்பு ஏனைய மூன்றையும் மட்டுமல்ல, அதற்கும் மேலாக வேறு பல வடிவங்களையும் (கட்டமைப்பு, மேம்பாட்டு, பண்பாட்டு மற்றும் மரபுரிமை இன அழிப்பு) உள்ளடக்கியுள்ளது என்பதையும் அதனால் அதைப் பற்றி மட்டுமே ஈழத்தமிழர் தரப்பு பேசவேண்டும் என்பதுவே அது.

தற்போது, ஜெனீவா நிலைப்பாடு பற்றி பேசுபவர்களும் இந்த வகையில் இன அழிப்பை "உள்ளொன்றாய் வைத்துக்" கையாளவே விழைகிறார்கள். இது ஏற்புடையதன்று.

பழைய பூனைகளின் அணுகுமுறையை விடவும் தமது அணுகுமுறை மேலானது என்று புதிய பூனைகள் நினைத்துக்கொண்டு மீண்டும் கண்ணை மூடி புதிய நஞ்சைப் பாலாகத் தேடுகின்றன.

பழைய பூனைகளோ, மீண்டும் ஒரு முறை பழைய தீர்மானத்தையே ரொல்-ஓவர் (roll-over) செய்துவிடுமாறு வேண்டுவதே சாலச் சிறந்த தற்கொலை மருந்தென்று தமக்குள் பேசிக்கொள்கின்றன.

ஆக, கூர்மையாகவும் வரலாற்றில் முதல் இருக்கும் தீர்மானங்களின் நீட்சியாகக் கூர்ப்புடனும், தற்போதைய நிலையில் எதைச் சரியாக முன்வைக்கவேண்டுமோ அதை முன்வைக்க எவரும் இது வரை முன்வரவில்லை.

அப்படியானால், செய்யவேண்டியது தான் என்ன?

ஜெனீவாவில் இயங்கும் மனித உரிமைச் சபையின் செயற்பாடுகள் அனைத்தும் பத்து அட்டவணை நிரல் உருப்படிகளுக்கு (Agenda Items) உட்பட்டவை.

அவற்றில் ஏழாவதாக இருக்கும் உருப்படி "பலஸ்தீனத்தினதும் ஏனைய ஆக்கிரமிக்கப்பட்ட அரேபிய பிரதேசங்களிலான மனித உரிமை நிலைமை" பற்றியது. இது ஒன்றே ஒரு குறிப்பிட்ட இன அல்லது நாட்டு மக்கள் பற்றியது. இது கால எல்லை அற்ற நிரந்தரமான ஒரு உருப்படி. மற்றையவை எல்லாம் பொதுவான உருப்படிகள். தனித்தனித் தீர்மானங்களும் அவற்றுக்கான அறிக்கையிடலும் சார்ந்த பொதுவான உருப்படிகள் அவை; அவற்றுக்குள் வரும் தீர்மானங்கள் கால எல்லைகளுக்கு உட்பட்டவை; காலாவதியாகிவிடக்கூடியவை.

இலங்கை தொடர்பான தீர்மானம் இரண்டாவது உருப்படிக்குள் வருகிறது. அதாவது, "ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரினதும் அவரது அலுவலகத்தினதும் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினதும் வருடாந்த அறிக்கையிடல்" என்ற உருப்படி அது.

பொதுவாக இரண்டாவது உருப்படிக்குள் கொண்டுவரப்படும் தனித்தனி நாடுகள் தொடர்பான தீர்மானங்கள் குறித்த நாடுகளுடனான ஒப்புதலுடனானவையாகவே இருக்கும். ஆதலால், இந்த உருப்படி அவ்வளவு கடுமையானதல்ல. இதற்குள் தான் இலங்கை தொடர்பான முப்பது/ஒன்று தீர்மானமும், அதன் நீடிப்புத் (roll-over) தீர்மானங்களும் வருகின்றன.

ஆனால், உருப்படி நான்கு கடுமையானதொன்று.

"மனித உரிமைச் சபையின் கவனத்தை வேண்டிநிற்கும் மனித உரிமை நிலைமைகள்" என்று அதற்குப் பெயர். இதற்குள் ஒரு நாடு தொடர்பான தீர்மானத்தைக் குறித்த நாட்டின் ஒப்புதல் இல்லாமலே கொண்டுவரலாம் என்பதால் பொதுவாக இது கடுமையான உருப்படியாக நோக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஏன் உருப்படி நான்கிற்குள் நகர்த்தி, இன அழிப்புத் தொடர்பான அறிக்கையிடலைக் குறிப்பாகக் கோரமுடியாது என்பதே எம் முன் இந்தச் சபை தொடர்பாக இருக்கும் கேள்வி.

ஐ.நா. மனித உரிமைச் சபையின் பத்து அட்டவணை உருப்படிகளும் வருமாறு:

    1. Organizational and procedural matters

    2. Annual report of the United Nations High Commissioner for Human Rights and reports of the Office of the High Commissioner and the Secretary-General

    3. Promotion and protection of all human rights, civil, political, economic, social and cultural rights, including the right to development

    4. Human rights situations that require the Council’s attention

    5. Human rights bodies and mechanisms

    6. Universal Periodic Review

    7. Human rights situation in Palestine and other occupied Arab territories

    8. Follow-up and implementation of the Vienna Declaration and Programme of Action

    9. Racism, racial discrimination, xenophobia and related forms of intolerance, follow-up and implementation of the Durban Declaration and Programme of Action

    10. Technical assistance and capacity-building

இலங்கை ஒற்றையாட்சி அரசும் தீர்மானம் முப்பது/ஒன்றிற்கான தனது இணை-ஆதரவில் இருந்து தான் விலகியிருக்கிறதே ஒழிய, தனது கடப்பாடுகளில் இருந்து அல்ல என்பதும் இங்கு கவனிக்கற்பாலது.

அந்தரங்கமாக, தனது கடப்பாடுகள் பற்றிய ஒரு தொடர்பாடல் இலங்கை அரசுக்கும் சபைக்கும் இடையே நேரடியாகவோ, அல்லது மறைமுகமாக மூன்றாம் தரப்புகள் ஊடாகவோ நடந்தவண்ணமே இருக்கும்.

வெகுசனங்கள் மீதான அட்டூழியக் குற்றங்கள் (Mass atrocity crimes) என்று புதிய முகடு இட்டு, அதற்குள் போர்க்குற்றம் (War Crimes), மானுடத்திற்கெதிரான குற்றம் (Crimes against humanity), இனச் சுத்திகரிப்பு (Ethnic cleansing), இன அழிப்பு (Genocide) ஆகிய நான்கு குற்றங்களை உப குற்றங்களாக்கி, அவை அனைத்துக்கும் ஒன்றாகச் சேர்த்து நீதி கேளுங்கள்; தனியே இன அழிப்பு என்று கேட்டால் ஒன்றும் கிடைக்காது என்ற கருத்தை மேற்குலக சக்திகள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடம் ஒரு மிதவாதப் போக்காக விதைத்துவிட்டிருக்கின்றன

இந்தத் தொடர்பாடல்களில் இலங்கை அரசு எதை அடைய முயற்சிக்கும் என்றால், பத்தாவது உருப்படிக்குள் தான் வேண்டிக்கொள்ளும் வகையில் ஐ.நா. மனித உரிமைச் சபை வேண்டுமானால் தனது பங்களிப்பைச் செலுத்த முன்வரலாம் என்பதாக இருக்கும்.

இதற்குக் கூட, தான் உடன்படுவதற்கு முன்னர், குறித்த மூன்றாம் தரப்புகளிடம், அவற்றின் புவிசார் மூலோபாய நலன்களுடன் பின்னிப்பிணைந்த இணக்கம் ஒன்றை ஏற்படுத்தி, பதிலீடாக ஐ.நா. மட்டத்தில் தமிழர் தரப்பு மீது வேறு மட்டங்களில் கடுமையான நடவடிக்கை ஒன்றையும் எடுக்கவைக்கும் வகையிலேயே தனது பேரம் பேசலை கோட்டபாய அரசு நிகழ்த்திக்கொண்டிருக்கும்.

இம்முறை இந்தியாவும் ஐ நா மனித உரிமைச் சபையில் உறுப்புரிமை கொண்டிருக்கிறது என்பதையும், எந்தச் சக்தியுடன் இலங்கை அரசு பேரம் பேசலில் ஈடுபட்டிருக்கும் என்பதையும் இங்கு உய்த்துணரலாம்.

ஆகவே, உருப்படி நான்கிற்குள் இலங்கை தொடர்பான இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை தொடர்பான அறிக்கையிடலுக்கான ஒரு தீர்மானம் கொண்டுவருவதற்கு உறுப்பு நாடுகள் மீது கருத்துத் தாக்கத்தைச் செய்வதாக ஈழத்தமிழர் தரப்பின் முனைப்பு இருக்கவேண்டும்.

இத்தருணத்தில், இன அழிப்புத் தொடர்பான நீதி விசாரணையைச் சர்வதேச நீதிமன்றுக்குப் பாரப்படுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் ஒன்றுக்கான முன்மொழிவையும் கோருதல் வேண்டும். அவ்வாறு கோருவதால் நடைமுறையில் ஒரு பயனும் கிடைக்கப்போவதில்லை என்றும் வீட்டோ அதிகாரத்தை ஏதோ ஒரு வல்லாதிக்கம் பயன்படுத்தி அதைத் தடுத்துவிடும் என்றும் புதிய கண்மூடிப் பூனைக் கருத்துகள் வெளிவரவே செய்யும்.

அப்படியான கருத்துகளை முன்வைப்பவர்களுக்குச் சொல்லவேண்டியது ஒன்றுதான். வீட்டோ வந்தால் என்ன? வரட்டுமே. அது வரும் போது எந்த வல்லாதிக்கம் அதைத் தடுக்கிறது என்பதாவது எமக்குத் தெளிவாகத் தெரிந்துவிடுமல்லவா? அதனால் ஏது தீங்கும் இல்லையே. தெளிவுதானே ஏற்படும். ஆகவே, வீட்டோவுக்கு நாம் ஏன் அஞ்சவேண்டும்? அதியுச்ச குற்றத்துக்கான, அதுவும் குற்றங்கள் அனைத்தினதும் குற்றத்துக்கான சர்வதேச நீதியை மட்டும் தனிமைப்படுத்திக் கோருவதில் ஏன் நாம் தயங்க வேண்டும்?

கண்மூடிப் பூனைகளின் அனைத்து அணிகளும் அம்பலப்படவேண்டிய காலம் இது.

கண்திறக்கத் தயாரில்லாத கண்மூடிப் பூனைகள் தமிழ் உரிமைத் தளத்தை விட்டே அகன்று செல்வதுதான் அவற்றுக்கு நல்லது என்ற உணர்வு அவைக்கு ஏற்படாத வரை, மீண்டும் மீண்டும் அவை கண்மூடிப் பால் குடிக்கத் தயாராகவே காத்திருக்கும்.

உரிமைக் கண்ணிழந்த குருடர்களாக ஒரு தேச மக்கள் இருக்கும் வரை கண்மூடிப்பூனைகளுக்கே செல்வாக்கு!

ஈழத்தமிழர் உரிமைப் பரப்பின் செயற்பாட்டாளர்களும் ஊடகங்களும் இனியாவது விழித்துக்கொள்ளவேண்டும். கண்மூடிப் பூனைகளின் அரசியலுக்குச் சாவுமணியடித்தாகவேண்டும்!