இந்த அதிஸ்டலாபச் சீட்டு விற்பனையில் கிடைக்கும் நிதி, சிங்கப் படைப்பிரிவின் இராணுவத்திற்கும் போரில் காயமடைந்து ஊனமுற்ற இராணுவத்திற்கும் அவர்களின் குடும்பங்களிற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த அதிஸ்டலாபச் சீட்டு விற்பனையின் மூலம் வருடாந்த சிங்க மேளா நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் வழங்கிய அதிக அதிகாரங்களை அடுத்து இலங்கை இராணுவத்தினர் அதிஸ்டலாபச் சீட்டை வாங்க விரும்பாதவர்களை மிரட்டி விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தரவை முகாமைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் சீட்டிழுப்பு விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு சிங்கப் படைப்பிரிவுக்கு வரி செலுத்துவதைப் போல இந்த சம்பவம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
வருடாந்த சிங்க மேளா நிகழ்வை மூன்றாவது தடவையாக இவ்வருடமும் நடத்த சிங்கப் படைப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.