இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மாதா சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தற்போது சுமூகநிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், மீண்டும் மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பல தடவைகள் வேளாங்கன்னி மாதா சொரூபம் அடையாளந் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள், இந்த சிலை உடைப்பு சம்பவங்களைக் கண்டிப்பதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.