மாதுருஓயா இராணுவ முகாமில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய- இலங்கை நாடுகளின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் ஐ.எஸ் அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள், நெருக்குதல்கள் ஏற்படலாம். அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மஹேஸ் சேனாநாயக்கா கூறினார்.
புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் புலனாய்வுத் துறையினருடன் இணைந்து செயற்படுவதால், ஐ.எஸ் அடிப்படைவாதிகளின் பயங்கரத் தாக்குதல் நடவடிக்கைகளை தடுக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், முஸ்லிம்களின் பாதுகாப்பு போதியளவு உறுதிப்படுத்தப்படவில்லையெனவும், சந்தேகத்தில் மேலும் பலர் கைது செய்யப்படுவதாகவும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஐ.எஸ் தாக்குதல்களைத் தடுக்க இந்திய- இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இணைந்து செயற்படுவது வரவேற்கக் கூடியதுதான். ஆனாலும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்குரியதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் கூறுகின்றன.
பௌத்த பிக்குமாரின் அழுத்தங்களினால் ரணில் விக்கிரமசிங் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து ஒன்பது முஸ்லிம் உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து விலகினர்.
பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவர் சென்ற ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.