ஆனால் குறித்த பாடசாலையில் இருந்து அழைப்புக் கிடைத்ததாகவும் அதனாலேயே பாடாசாலைக்குச் சென்றதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, குறித்த நபர் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் உத்தரவை மீறி பாடசாலை வளாகத்திற்குள் செல்ல முற்பட்டதாகவும் இதனாலேயே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணங்களை ருவான் குணசேகர கூறவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அக்மீமனப் பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. இலங்கை காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் வழமை போன்று இயங்கியதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.