ஆனால், தற்போது முஸ்லிம்களின் பாதுகாப்பு இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இன்று வியாழக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுக்குள்ளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வாரெனவும் பைசல் காசிம் தெரிவித்தார்.
இதேவேளை, ரிசாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை ஏற்க முடியாதென மகிந்த தரப்பு உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆனால் மகிந்த ராஜபக்ச ரிசாட் பதியுதீன் தொடர்பாக எதுவுமே கூறவில்லை.
ரிசாட் பதியுதீனின் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லையென்றால் அவர் அமைச்சுப் பதவியை ஏற்பதில் தவறில்லையென மகிந்த ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் ஏலவே கூறியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் ரிசாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை மீண்டும் ஏற்பதை விரும்பவில்லையென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் பதவி விலகிய அடுத்த வாரமே மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். இதேவேளை. முஸ்லிம்களின் பாதுகாப்பு சரியான முறையில் உறுதிப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளது.
ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து கடந்த மே மாதம் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.