இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக வந்துவிட வேண்டும் என்பதில் மாத்திரமே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் செயற்படுகின்றனர். போரின் பக்க விளைவுகளுக்குக் கூடத் தீர்வை முன்வைக்குமாறு சர்வதேசத்தை நோக்கி அழுத்தம் கொடுக்கவில்லை.
1976 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், அன்றில் இருந்து இன்று வரை சிங்கள ஆட்சியாளர்களை நம்பி, தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஏமாந்து வருவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். போரை இல்லாதொழிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத உதவியளித்த அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், தற்போது ஈழத் தமிழர் விவகாரத்தில் அமைதியாகவுள்ளன.
தமிழ் அரசியல் கட்சிகளை நம்புவதைவிட தொடர்ச்சியாகப் போராடி சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறினர்.