இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் ஜப்பான் உதவித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகக் கொழும்புக்கு வருகை தந்துள்ள யசூசி அகாசி, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததார்.
ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பலவேறு விடயங்கள் தொடர்பாக யசூசி அகாசி மகிந்த ராஜபக்சவுடன் உரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமைக்கு யசூசி அகாசியின் அமெரிக்க, இந்தியச் சார்புச் செயற்பாடுகளும் பிரதான காரணம் என அப்போது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொழும்புக்கு வருகைதந்துள்ள யசூசி அகாசி, சிங்கள ஆட்சியாளர்கள் பலரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல்.பீாிஸ், ஹெகலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்துகொண்டனர். யசூசி அகாசியோடு கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக அதிகாரிகள் பங்குபற்றினர்.