இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா பெரும் பங்காற்றியது என்றும் பெருமளவு இந்தியர்கள் கொழும்புக்கு வந்து சென்றதாகவும் உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் சகல ரட்ணாயக்கா, பௌத்த சமயம் இந்தியாவில் இருந்து கிடைத்த மாபெரும் சொத்து என்று கூறினார்.
வடக்குக்- கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் சாகல ரட்ணாயக்கா கூறினார்.
காங்கேசன்துறை முகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு 45.7 மில்லியன் அமொிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும் சாகல ரட்ணாயக்கா மேலும் தெரிவித்தார்.
வெளிநாடு ஒன்றுக்கு வழங்கும் அதிகபட்ச நிதியுதவியை இந்தியா இலங்கைக்கே வழங்குவதாகவும் கூறிய அமைச்சர் சாகல ரட்ணாயக்கா, இந்தியா எப்போதுமே இலங்கையுடன் நெருங்கிய இராஜதந்திர உறவை பேணி வருவதாகவும் குறிப்பிட்டார்.