ஜனாதிபதித் தேர்தலில் முன் நிறுத்தப்படும் வேட்பாளர்களை அடிமைப்படுத்தி அதன் மூலம் இலங்கையைக் கைப்பற்றுவதே அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பிரதான நோக்கம் என்றும் அதற்காகவே இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கங்கணம் கட்டித் திரிவதாகவும் விஜயதாச ராஜபக்ச கூறுகின்றார்.
போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என்பதில் இதுவரை பிரதான அரசியல் கட்சிகள் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. ஆனால் கொழும்பில் உள்ள அமெரிக்க, சீன நாடுகளின் தூதுவர்கள் இலங்கையில் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை ஆரம்பித்துவிட்டனர்.
இந்த இரு நாடுகளின் தலையீட்டின் அளவு என்ன என்பதையும், அதனூடாகப் பெறப்படுகின்ற பிரதிபலனுக்கு உரிமை கொண்டாட முடியும் என்பதையும் அந்த இரு நாடுகளும் நன்கு அறியும்.
அதனூடாக இலங்கையை அடிமைகளின் தீவாக மாற்றியமைக்க முடியும் என்பதையும் அமெரிக்காவும் சீனாவும் அறியும். எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த இரு நாடுகளும் இலங்கை மீது தலையிடுவதாகவும் விஜயதாச ராஜபக்ச கூறினார்.