அந்தப் பகுதியால் செல்லும் அனைத்துப் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
பம்பைமடுப் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரே இந்தச் சோதனைச் சாவடியை அமைத்துள்ளனர். இது தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய பாதுகாப்போடு தொடர்புடைய விடயம் என்பதால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியைப் படம் எடுக்க முடியாதென்றும் அது பற்றிய செய்திகளை எழுத வேண்டாமெனவும் இராணுவத்தினர் கூறியதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டதால் பிரதேச மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறுகின்றனர். அதேவேளை அம்பாறை நாவிதன் வெளிப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை புதிய சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.