இந்த நிலையில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பாக மூத்த சட்டத்தரணிகள், மற்றும் வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசித்து வருவதாகவும் காமினி வியங்கொட கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ரிட் மனுவைத் தாக்கல் செய்வது குறித்து நாளை வியாழக்கிழமை சட்டத்தரணிகளோடு கலந்துரையாடல் நடத்தப்படும் என்று தெரிவித்த காமினி வியங்கொட, பெரும்பாலும் எதிர்வரும் வாரமளவில் ரிட் மனுவை தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கைக் குடியுரிமையைப் பெற்ற முறை சட்டத்திற்கு அமைவானது என்று நான்காம் திகதி கூறி சென்ற நீதியரசா் யசந்த கோதாகொட தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழு மனுவை நிராகரித்திருந்தது.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கையொப்பத்துடன் இலங்கைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் இலங்கைக் குடியரிமையை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக் கொண்ட முறை சட்டத்திற்கு மாறானது என்று குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.