கிரான் ,ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமுற்றுள்ளது. மட்டக்களப்பு- மண்முனைவடக்கு நாவற்குடா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சித்தாண்டி- ஈரளக்குளத்திற்கான தரைவழிப் போக்குவரத்து கடந்த ஒரு வாரமாக முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஈரளக்குளம் கிராமத்திற்குள்ளும் தற்போது சுமார் 8 கிலோமீட்டர் வரை ஆற்று நீர் பிரவேசித்துள்ளது.
சந்தனமடு ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் சித்தாண்டியின் நான்கு கிராம சேவகர் பிரிவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சந்துவெளி ஆறு பெருக்கெடுத்தமையினால், சந்துவெளி கிராமத்திற்குள் சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளது.
இதேவேளை, முறக்கொட்டாஞ்சேனை ஆறு பெருக்கெடுத்தமையினால் 125-இற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு வாரமாக மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.