கிழக்குக் கடற்படையின் பிரதான முகாமுக்குச் சென்ற ரஷியக் கடற்படையின் உயர்மட்ட குழு, அங்கு நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டது. இலங்கைக் கடற்படைத் தளங்களையும் பார்வையிட்டது.
இலங்கைக் கடற்படையின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கைக் கடற்படைக்குழு ஒன்று இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியது.
இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான திருகோணமலையில் உள்ள கடற்படைக் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கைப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் இதில் பங்குபற்றியிருந்தனர்.
சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் போர் தொடர்பாக ரஷியக் கடற்படை உயர்மட்டக்குழு இந்தக் கலந்துரையாடலில் விளக்கமளித்தது. இலங்கையிலும் இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறாமல் எவ்வாறு தடுப்பது குறித்தும் ரஷிய- இலங்கைக் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட கலந்துரையாடல் என்று இலங்கைக் கடற்படையின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.