குறித்த பெண் பணியாளர் விசாரணையின்போது கடத்தப்பட்டமை தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, உடல்நிலை குறித்த மதிப்பீட்டிற்காக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் குறித்த பெண் பணியாளரைப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொழும்பு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
அத்துடன் இன்று ஒன்பதாம் திகதிவரை பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான பயணத் தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையும் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் பெறப்படுவதோடு மருத்துவப் பரிசோதனையும் இன்று இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் தூதரகப் பெண் பணியாளர் கொழும்பில் கடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லையென்றும் அந்தக் கடத்தலுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இல்லையெனவும் அமைச்சா் பந்துலா குணவர்த்தன நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தாா்.