பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு உத்தரவிட்டபோதும் அதற்குரிய கடிதங்கள் எதுவும் குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுக் கடிதம் கூட கையளிக்கப்படாத நிலையில் எவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குச் செல்ல முடியுமென மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் அரச அதிகாரிகள் சிலர் கொழும்பு அரசியல் செவ்வாக்குடன் ஊழல் மோசடியில் ஈடுபடுகின்றமை அல்லது ஒத்துழைப்புச் செய்கின்றமை தொடர்பான பல விடயங்களை சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தன் எழுதியதால் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கை அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊடக அடக்குமுறைகளைக் கண்டித்துக் கவனஈர்ப்புப் போராட்டம் சென்ற டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சிவில் சமூக அமைப்புகள், பொது மக்கள் ஒன்றிணைந்து, இந்தப் போராட்டத்தை நடத்தியிருந்த நிலையில் நிலாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தை அச்சுறுத்தியுள்ளனர்.