நீதிமன்ற அனுமதி இல்லாது மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று சனிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரகசியமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்ட இடம் விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செயலகங்கள் அமைந்திருந்த பகுதி என்றும் அந்தப் பகுதியில் இருந்து சமீபத்திலேயே படையினர் வெளியேறியிருந்ததாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தியதால் மண் அகழ்வு அனுமதியை கிளிநொச்சி மாவட்டச் செயலகம் தற்காலிகமாக ரத்துச் செய்திருந்தது. இந்த நிலையில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். தங்கம் இருப்பதாகச் சந்தேகித்தும் சிலர் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.