இலங்கை ஒற்றையாட்சி் அரசின்

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கையில்லை- தேர்தல்கள் ஆணைக்குழு குற்றச்சாட்டு

நாடாளுமன்றத் தேர்தலின்போது பாரிய சவால் ஏற்படுமெனவும் எச்சரிக்கை
பதிப்பு: 2020 ஜன. 06 23:23
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 07 23:57
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இதுவரை நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லையென இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாமையினால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பாரிய சவால்களை எதிர்நோக்கவுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
 
சென்ற நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சில கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கும், அரச சேவை ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழ அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.

சில அரச அச்சு ஊடகங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறிப் பக்கச் சார்பாக செயற்பட்டமை தொடர்பாகவும் பொலிஸாரின் பக்கச்சார்பான நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழு அழுத்தம் கொடுத்திருந்தது.

ஆனால் பொது நிர்வாக அமைச்சும் அரச சேவை ஆணைக்குழுவும் இதுவரை நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லையென மகிந்த தேசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.