சென்ற நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சில கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கும், அரச சேவை ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழ அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.
சில அரச அச்சு ஊடகங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறிப் பக்கச் சார்பாக செயற்பட்டமை தொடர்பாகவும் பொலிஸாரின் பக்கச்சார்பான நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழு அழுத்தம் கொடுத்திருந்தது.
ஆனால் பொது நிர்வாக அமைச்சும் அரச சேவை ஆணைக்குழுவும் இதுவரை நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லையென மகிந்த தேசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.