இலங்கை அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் என்பது தேசிய மொழியிலான தமிழ் மொழியில் முழுமையான அமுலாக்கத்தினையும் உள்ளடக்குகின்றது.
ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத இலங்கைக்குள் தீர்வொன்றை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என்றும் சுமந்திரன் கூறினார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சுமந்திரன் இனப்பிரச்சினைத் தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாக நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கினார்.
இலங்கைத் தமிழரசு கட்சி அல்லது பெடரல் கட்சி என அறியப்பட்ட கட்சி குடியுரிமைச் சட்டத்தின் விளைவாக பிறந்த ஒரு கட்சியாகும். இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டமானது முதலாவது நாடாளுமன்றத்தில் ஏழு அங்கத்தவர்களை கொண்டிருந்த கிட்டத்தட்ட எட்டு இலட்சம் மக்களின் வாக்குரிமையை இரத்து செய்திருந்தது.
பெரும்பான்மையினரின் விருப்பம் என்ற ரீதியிலேயே ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை இது பறித்தது. மேலும் அவர்களுடைய குடியுரிமையையும் இல்லாமல் செய்தது என்றும் சுமந்திரன் விளக்கமளித்தார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தின் பேரினவாத செயற்பாடு காரணமாகவே இலங்கை தமிழரசுக் கட்சி எம் இன அடிப்படையிலான ஒரு கட்சியாக உருவாகுவதற்கான தேவை உண்டாக்கியது என்பதை இந்த தென்பகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்தில் தங்கியிருக்கவில்லை. ஜனநாயகமானது தப்பித்துக்கொள்ளவும் செழிப்படையவும் வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இந்தக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறினார்.