இலங்கைப் பொலிஸார், விசேட அதிரடிப்படை, இராணுவம் ஆகிய படைகள் இணைந்து நடத்திய தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்துக்கிடமான ஆயுதங்களோ, பொருட்களோ கைப்பற்றப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் அவ்வப்போது தொடருமென யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை நேற்றுச் சனிக்கிழமை தெல்லிப்பளை;ப் பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி. கொள்ளுப்பிட்டி. கொட்டாஞ்சேனை, மட்டக்குழிய உள்ளிட்ட பிரதேசங்களிலும் வாழும் குடியிருப்பாளர்களும் பொலிஸாரால் பதிவு செய்யப்படுகின்றனா்.
இலங்கைப் பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ள விசேட விண்ணப்பப்படிவம் ஒன்றில் குடியிருப்பாளர்கள் தமது விபரங்களை எழுதிக் கொடுக்க வேண்டுமென பொலிஸார் கூறியுள்ளனர்.