ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நூற்றி ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் அறுபதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே புதிய கூட்டணி அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சஜித் பிரேமதாசவின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை, புதிய அரசியல் கூட்டணியின் பொதுச் செயலாளராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வேறு மூத்த உறுப்பினர்கள் சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது. புதிய அரசியல் கூட்டணிக்குரிய சின்னமும் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் புதிய அரசியல் அணியை உருவாக்குவது தொடர்பாகவும் சஜித் பிரேமதாச பௌத்த மாகாநாயக்கத் தேரர்களையும் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்களையும் சந்தித்து விளக்கமளித்தும் வருகின்றார்.