கோட்டாபய ராஜபக்ச 69 இலட்சம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியானார். ஆனால் அதன் பின்னர் அவர் பகிரங்கமாக தனது கொள்கை விளக்கவுரையில் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே தான் ஜனாதிபதியானதாகக் கூறினார்.
ஆகவே சிங்களப் பெரும்பான்மைத்துவத ஒற்றையாட்சி என்று கோட்டாபய ராஜபக்ச கூறினார். அவர் தனது பதவி ஏற்பு உரையிலோ அல்லது கொள்கை விளக்கவுரையிலோ இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளதாகக் கூறவேயில்லை என்றும் மாவை சேனாதிராஜா கூறினார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய அரசாங்கம் தரப்பினர் மாத்திலமல்ல எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூட இந்த இனப்பிரச்சினை ஒன்றுள்ளதைப்பற்றிப்பேச மறு்ப்பதாகவும் மாவை சேனாதிராஜா கூறுகிறார்.
தமிழ் மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அரச அதிபரான வேதநாயகனை அவர் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில் வலுக்கட்டாயமாக இடமாற்றியது எதற்காக என்றும் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பினார்.
மட்டக்களப்பு அரச அதிபர் உதயகுமாரும் வலுக்கட்டாயமாக இடமாற்றப்பட்டு தற்போது ஓய்வுபெறவுள்ளதாகவும் இது அரசியல் பழிவாங்கல் செயற்பாடு எனவும் மாவை சேனாதிராஜா கூறினார்.