இதன்போது அங்கிருந்து தப்பியோடிச் சென்றிருந்த ஒருவர், வழங்கிய தகவலின்படி நடத்தப்பட்ட விசாரணையில் 14 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
பின்னர் இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட்டிருந்தது. மூவரடங்கிய நீதிபதிகள் குழு வழக்கை விசாரித்தது. 14 இராணுவச் சிப்பாய்களில் ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
25 ஆம் திகதி ஆணி மாதம் இராணுவச் சிப்பாய் சுனில் ரட்ணாயக்காவுக்கு நீதிபதிகள் மரணதண்டனை விதித்திருந்தனர். போதிய ஆதரங்கள் இல்லையென்பதால் ஏனைய நான்கு சிப்பாய்களும் போதிய ஆதாரமில்லையென்பதால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையிலேயே சுனில் ரத்னாயக்கவிற்கு, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யவுள்ளதாகக் கூறப்படுகின்றது.