மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்ததில் இருந்து தமது மாவட்டத்தைப் பாதுகாக்க தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியே எதிர்ப்பு வெளியிடுவதாக தமிழ் உணர்வாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாகச் செயழிலந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் இயங்கவில்லை.
கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்களை உடனடியாக மூடி மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் இல்லாத பெருமளவு பிரதேசங்கள் தென் பகுதியில் இருக்கும் போது மக்கள் நெருக்கமாக வாழும் மட்டக்களப்பு மாட்டத்தில் எதற்காக கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நேற்றுப் புதன்கிழமையும் போராட்டம் இடம்பெற்றிருந்தது.