இந்த நிலையில் மேலும் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கும் நோக்கில் பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை, யாழ்ப்பாணம் நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன.
ஆனாலும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மாநாகர சபையின் சுகாதார ஊழியர்கள் ஆகியேர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து வருவதாக யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநாகர சபை, மன்னார் நகர சபை, வவுனியா நகர சபை ஆகியனவும் தத்தமது பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாவட்ட அரசாங்க அதிபர்களும் சுத்தம் செய்யும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.