பரிசோதனைக் கருவிகள் இலங்கையில் போதியதாக இல்லை என்பதால் சந்தேகத்துக்குரியவர்கள் பலரின் ரத்த மாத்திரிகள் இன்னமும் பரிசோதிக்கவில்லை என்றும் அந்தப் பிரிசோதனை முடிவுகளும் வெளியான பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் பழகிய நபர்களும் வைரஸ் தொற்றியுள்ள சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு வரக் கூடும் எனவும் வேறு சிலர் வராமலேயே ஒழிந்துவிடும் சந்தர்ப்பங்களும் இருப்பதாகவும் இது மேலும் ஆபத்தான ஒரு நிலைமை இலங்கையில் உருவாக்குமென்றும் வைத்தியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, இன்று வியாழக்கிழமை மேலும் ஐந்து பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக வடக்குக்- கிழக்குத் தமிழ் மக்கள் கூடுதலாககப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று ஏற்படும் என்ற சந்தேகம் ஒரு புறமிருக்க மறுபுறத்தில் அன்றாடம் உழைத்து வாழ்வோர், சுயதொழிலில் ஈடுபடுவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கை அரசாங்கத்தின் உதவிகள் போதியதாக இல்லையென்று மாவட்ட அரசாங்க அதிபர்கள் கூறியுயுள்ள நிலையில் அங்குள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தங்களால் முடி்ந்தளவு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். சில பிரமுகர்களும் புலம் பெயர் தமிழர்களும் உதவிகள் செய்வதாக மக்கள் கூறுகின்றனர்.