கொரோனா வைரஸ் தாக்கம்

நாடாளுமன்றத் தேர்தலை மேலும் பிற்போடுவது குறித்து கட்சித் தலைவர்களுடன் கோட்டாபய பேசவுள்ளார்

பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் கலந்துரையாடத் தீர்மானம்
பதிப்பு: 2020 ஏப். 05 21:33
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 05 22:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்தத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்தும், கொரேனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வாதால் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்சித் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்வாதல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
இதனால் தற்போதைக்குத் தேர்தலை நடத்த முடியாதென்று எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன. பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான காப்பாந்து அமைச்சரவை கூடியபோதும் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் பேசியுள்ளதாகவும் இதனால் அரசாங்க உயர்மட்டம் நாடாளுமன்றத் தேர்தலை மேலும் பிற்போடுவதற்கு ஆலோசிப்பதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை பிற்போட முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருமாறு இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த நிலையிலேயே நாளை திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளுமா என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.