இதனால் தற்போதைக்குத் தேர்தலை நடத்த முடியாதென்று எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன. பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான காப்பாந்து அமைச்சரவை கூடியபோதும் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் பேசியுள்ளதாகவும் இதனால் அரசாங்க உயர்மட்டம் நாடாளுமன்றத் தேர்தலை மேலும் பிற்போடுவதற்கு ஆலோசிப்பதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை பிற்போட முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருமாறு இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்த நிலையிலேயே நாளை திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளுமா என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.