இதனால் பொலிஸாரின் அனுமதியோடு அங்கு மீன்களைக் கொள்வனவு செய்ய வந்தவர்களையும் அங்கு மீன்களைக் கொள்வனவு செய்து கொண்டு கொழும்பில் வேறு பிரதேசங்களுக்கு அந்த மீன்களை விற்பனை செய்யச் சென்ற வியாபாரிகளையும் கண்டறிய முடியாதுள்ளது. அத்துடன் மீன்களைக் கொண்டு எந்தெந்த இடங்களில் விற்பனை செய்தார்கள் என்பதையும் கண்டறிய முடியவில்லை.
இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை பொலிஸார் உரிய முறையில் அமுல்படுத்தவில்லை என்பது தொடர்பாக சுகாதார அமைச்சும் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாதகவும் மருத்துவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ரும் ஆபத்தான நிலமை கொழும்பில் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, கொழும்பின் புநகர் பகுதியான வெலிசறை கடற்படைத் தளத்தில் 29 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரேனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கடற்படைத் தளமும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் இன்று வியாழக்கிழமை இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று இரவு வரை 368 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.