இப்பகுதி மண்மேடு என்பதனால், சில குழுக்கள் இலங்கைப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களின் பாதுகாப்புடன் இரவு வேளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.
நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் வேளாண்மை செய்யும் நிலங்களில் வளம் பாதிக்கப்படுவதுடன், விளைச்சல் குறைவடைந்துள்ளதாக விவசாய அமைப்புத் தலைவர் சு.கேசவன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பலதடவைகள் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்த போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனினும், சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைத்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் கேசவன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு இலங்கைப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். முறையிடுகின்றனர்.
ஆனால், இலங்கை அரச உயர் அதிகாரிகளும் அந்த முறைப்பாடுகள் குறித்தும் மக்களின் பிரச்சினைகள் பற்றியும் அக்கறைப்படுவதாக இல்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.