இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தல்- கட்சிகளிடம் ஆலோசனை கோரல்

சுகாதாரத் திணைக்களத்தோடும் உரையாடல்
பதிப்பு: 2020 மே 22 20:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 23 20:56
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#parliament
#election
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக இழுபறி நிலை நீடித்துச் செல்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை முன்வைக்குமாறு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரடியாகச் சந்தித்து ஆலோசனை வழங்குமாறு அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் சுயேற்சைக் குழுக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். சுகாதாரத் திணைக்களத்துடன் பேச்சு நடத்த முன்னர் ஆலோசனைகளை வழங்க வேண்டுமென மகிந்த தேசப்பிரிய அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
அத்துடன் சுகாதாரத் திணைக்களத்தின் தீர்மானம் இல்லாம் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட வேண்டமெனவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கலைப்பு. மற்றும் தேர்தல் தொடர்பான எதிர் மனுக்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டுக்கும் விசாணைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னர் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளார்.