இந்த முறைப்பாடுகளை இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்கு முறைப்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரிடம் முன்வைத்துள்ளது.
இதனையடுத்து உயர் அரச அதிகாரிகளை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உரையாடிய கோட்டாபய ராஜபக்ச கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
எந்தவொரு வேட்பாளர்களுக்கும் உதவியளிக்க வேண்டாமென அரச திணைக்களத் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அவர் பணித்துள்ளார். உதவியளிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்தால் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுமெனவும் கோடடாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்படி உதவியளிக்க விரும்பும் அதிகாரிகள் தமது பதவிகளில் இருந்து விலகிவிட்டு அரசியலில் ஈடுபடுமாறும் கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை முன்வைத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும் இலங்கை அரச அதிகாரிகள் தமது அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்து, அரசியல்வாதிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.