இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள அரசியல் தலைவர்களின் நிலை-

ரணில் சஜித் மோதல்- கொழும்பு நீதிமன்ற அறிவிப்பும் வெளியாகவுள்ளது

மங்கள சமரவீர உள்ளிட்ட சிலர் தேர்தலில் இருந்து விலகியமைக்கு ரணில் காரணமெனக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 ஜூன் 16 23:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 17 21:56
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#sajithpremadasa
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கிய சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்கவோடு கடுமையாக வாக்குவாதப்படுவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி அணியில் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடவிருந்த மங்கள சமரவீர உள்ளிட்ட சிலப் போட்டியில் இருந்து விலகிக் கொண்டமைக்கு ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 99 உறுப்பினர்களை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
 
ஐக்கிய மக்கள் சக்தி அணியின் கீழ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

இதனால் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மனு ஓன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு கட்டளையிட்டுள்ளது.