வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபா ராஜபக்சக்களின் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் பிரதேசங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் இது அநீதியென்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்கா தெரிவித்தார்.
கொழும்பில் செய்;திகாயர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், சீன, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய சர்வதேச நிறுவனங்களும் வழங்கிய நிதி எங்கே என்று கேள்வி எழுப்பிய ரவி கருணாநாயக்கா, அரசாங்கம் உருவாக்கிய கோவிட் நிதியத்துக்கு 230 பில்லியன்கள் சேர்ந்ததாகவும் ஆனால் அந்த நிதிக்கு என்ன நடந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதே கேள்வியை எழுப்பிய ஜே.வி.பி உறுப்பினர் ஹந்துநெத்தி, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை அவசர தேவைகளுக்காகக் கூட்டுமாறு கோரப்பட்தை அரசாங்கம் நிராகரித்தமைக்கான காரணம் தற்போது மக்களுக்கும் தெரிந்துள்ளதாகவும் கூறினார்.
கொரோன நிதி உரிய முறையில் மக்களுக்கும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் ஆகியோரின் கைகளுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே இது தொடர்பாக அரசாங்கம் பகிரங்கமாகக் கூற வேண்டுமெனவும் ஹந்து நெத்தி கொழும்பில் செய்தியாளர்கிளடம் கூறினார்.