இந்த நிலையில் தமிழ் மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதியைச் தெரிவு செய்ய முடியுமென்பதைக் கடந்த தேர்தலில் சிங்கள மக்கள் நிரூபித்திருக்கிறார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
போரின் பின்னர் வடமாகாணம் சிறப்பாக அபிவிருத்தியடைந்துள்ளதென்று தமிழ் ஊடகவியலாளர்கள் தன்னி;டம் கூறியதாக மகிந்த ராஜபக்ச பத்தேகம மக்கள் சந்திப்பில் கூறினார்.
வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றும் மகிந்த ராஜபக்ச அந்த மக்கள் சந்திப்பில் கூறினார்.
ஆனாலும் சிங்கள மக்களின் பொரும்பான்மை வாக்குகளோடு ஆட்சியமைப்பதற்குரிய நிலையை சிங்கள மக்கள் தமது வாக்களிப்பின் மூலம் உருவாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.