நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அமுல்படுத்தப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமானால் மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் அவசியமாகும்.
நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைகவில்லையானால், வேறு வழிகளில் ரத்துச் செய்வது தொடர்பாகவே சட்ட ஆலாசனையை கோட்டாபய ராஜபக்ச பெற்றுவதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளை. 19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய அனுமதிக்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு வெள்ளவத்தையில் இன்றிரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினால் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேயே 19 ஆவது திருத்தச் சட்டம் 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.