மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கிய

19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய கோட்டாபாய முயற்சி

ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரத்துக்குள் அரச நிறுவனங்களை உள்வாங்க ஏற்பாடு
பதிப்பு: 2020 ஜூலை 17 21:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 17 22:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரச நிறுவனங்களைச் சுயாதீனமாகச் செயற்பட வைப்பதற்கான 19ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச்செய்து அனைத்து நிறுவனங்களையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 19ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் செய்தியாளர்களிடம் வெளிப்படையாகக் கூறினாலும் அந்தத் தித்தச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான இரகசிய ஏற்பாடுகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பொலிஸ் சேவை, தேர்தல் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆகியவற்றை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து தனக்குச் சாதகமான மூத்த வழக்கறிஞர்களோடு கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாக ஆலோசனை செய்கிறார்.
 
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அமுல்படுத்தப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமானால் மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் அவசியமாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைகவில்லையானால், வேறு வழிகளில் ரத்துச் செய்வது தொடர்பாகவே சட்ட ஆலாசனையை கோட்டாபய ராஜபக்ச பெற்றுவதாகக் கூறப்படுகின்றது.

அதேவேளை. 19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய அனுமதிக்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு வெள்ளவத்தையில் இன்றிரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினால் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேயே 19 ஆவது திருத்தச் சட்டம் 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.