கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் ஆபத்தானது என்றார்.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள சமஸ்டி ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி எற்றுக் கொள்ளவில்லை. ரணில் விக்கிரமசிங்கவோடும், மகிந்த ராஜபக்சவோடும் கலந்துரையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தங்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்திருக்கலnமென்றும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவை என்றும் வேடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி கோரிக்கையோ ஈழத் தமிழர் இறைமை பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழ் கல்வியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.