2015ஆம் ஆண்டு மார்ச் மாத அமர்வில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் இரண்டு வருட கால அவகாசமும் பின்னர் மேலும் இரண்டு வருடமும் அதன் பின்னர் மேலும் ஒன்றரை வருடகால அவகாசமும் வழங்கப்பட்டிருந்து.
இறுதியாகக் கொடுக்கப்பட்டிருந்த ஒன்றரை வருடகால அவகாசம், அடுத்த ஆண்டு மார்ச் மாதமே நிறைவுபெறுகின்றது. இந்த நிலையிலேயே சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார்.
அதன் பிரகாரம் சென்ற ஓகஸ்ட் மாதம் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அரசாங்கத்தை அமைத்துள்ளது. வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றிருந்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன. ஜெனீவாத் தீர்மானத்துக்கு இணை அணுசரனை வழங்குவதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
சென்ற மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்ட அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தீர்மானத்தில் இருந்து வெளியேறுவதாகக் கூறியிருந்தார்.
ஆகவே அதன் காரணமாக இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் தவிர்க்கப்பட்டதா அல்லது நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விவகாரங்கள் பேசப்படும்போது இலங்கை விவகாரம் எடுக்கப்படுமா என்பது குறித்து எதுவுதே அறிய முடியவில்லை.
இலங்கை வெளிவிவகார அமைச்சு நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வு பற்றி கருத்துக் கூறாமல் அமைதியாகவுள்ளது.