இதனடிப்படையில் மன்னார் மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா திருமலை மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார். திருமலை மாவட்ட பதில் நீதிபதி பி.சிவக்குமார் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ரி.சரவணராஜா முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியான எஸ்.லெனின்குமார் கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வவுனியா மாவட்ட மேலதிக நீதிபதியான திருமதி எச்.எம்.தஸ்னீம் மூதூர் மாவட்ட நீதிபதியாகவும் இதுவரை மூதூர் நீதிபதியாகப் பணியாற்றிய எம்.எஸ்.எம். சம்சுதீன் கல்முனை நீதவானாகவும் இடம்மாற்றம் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட நீதிபதி ஐ.பி.ரசாக் கல்முனையிலிருந்து திருமலை நீதவானாக இடமாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட பதில் நீதிபதியான எஸ்.சதிஸ்தரன் யாழ் மாவட்ட நீதிபதியாகவும் பருத்தித்துறை பதில் நீதவான் கே.பொன்னு த்துரை பருத்தித்துறை நீதவானாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர். மேலும் ஊர்காவல்துறை நீதிபதி ஏ.ஜீட்சன் சாவகச்சேரி நீதிபதியாகவும் சாவகச்சேரி நீதிபதி ஜே.கஜநிதிபாலன் ஊர்காவல்துறை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை காலம் பருத்தித்துறை மாவட்ட பதில் நீதிபதியாக செயலாற்றிய திருமதி ஜீ. சயிலவன் பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.
வவுனியா மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம் றியால் கல்முனை மாவட்ட நீதிபதியாகவும் சம்மாந்துறை நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆனமடுவ நீதிமன்ற நீதவான் திருமதி எம்.எப்.ஸ்சட். ஜெகான் வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வண்ணம் குறித்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் நீதிபதிகளின் இடமாற்ற உத்தரவு தொடர்பாகச் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.