தன்னுடைய கருத்தினால் மிகவும் ஆத்திரமடைந்திருந்த ஜனாதிபதி உரத்த தொனியில் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் இதனால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்றும் விஜயதாச ராஜபக்ச கூறினார்.
இந்த அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கை சீனாவின் கொலனியாக மாறுமென விஜயதாச ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தகாத வார்த்தைகளினால் ஏசவில்லை என்றும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரம் தொடர்பாகவே உரையாடியதாகவும் அமைச்சர் மகிந்தனந்த அழுத்கமகே கூறியுள்ளார்.
விஜயதாச ராஜபக்ச பொய்யுரைப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை. விஜயதாச ராஜபக்ச மாத்திரமல்ல அமைச்சர்கள் பலருக்கும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோட்டாபய ராஜபக்ச தகாத வார்த்தைகளினால் ஏசி அச்சுறுத்துவதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்சவுக்கு ஏசியது முதற்தடவையல்ல என்றும் இவ்வாறு பலருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அனுரகுமார திஸாநாயக்கா கூறியுள்ளார்.