அதேவேளை, ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுதல் விடுக்கும் செயற்பாடுகளோடு ரிஷாட் பதியுதீனுக்கும் அவருடைய சகோதரர் றியாத் பதியுதீனுக்கும் தொடர்புள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அஜித் ரோகண மேலும் கூறினார்.
இதேவேளை, ரிஷாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இதனை இலங்கை ஒற்றையாட்சி அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என்றும் அவர்கள் மீதும் துரித விசாரணை நடத்தப்படுமெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.