பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்னர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி மற்றும் அந்த அமைச்சின் கீழ் செயற்படவுள்ள அரச திணைக்களங்கள், அரச கூட்டுத் தாபனங்கள் குறித்த விபரங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வர்த்தமானி இதழில் வெளியிடப்படவுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரின் அமைச்சின் கீழ் இருக்கும் பல நிறுவனங்கள் பசில் ராஜபக்ச பதவியேற்கவுள்ள அமைச்சின் கீழ் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் 12 கூட்டுக் கட்சிகளின் தலைவர்களோடும் பசில் ராஜபக்ச ஒவ்வொரு நாளும் தனித்தனியாகச் சந்தித்து உரையாடி வருகின்றார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் இருக்கக்கூடாதென பசில் ராஜபக்ச கூறியுள்ளார். அமைச்சர் விமல் வீரவன்சவைச் சந்தித்து உரையாடியபோதே அவர் கூறியிருக்கிறார்.