அதேவேளை, நாட்டை முழுமையாகத் திறந்துவிட முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டெல்ரா வைரஸ் வேகமாகப் பரவுவதால் சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாமெனவும் அவர் கேட்டுள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இணையவழிக் கூட்டமொன்றில் கருத்து வெளியிட்ட அவர், தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் காலம் தாழ்த்தி ஆரம்பித்ததால் நோய்ப்பரவல் அதிகரித்ததாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாமெனவும் கடினமாக மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும் இலங்கை மருத்துவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.