இலங்கைத் தீவில்

அதிகரிக்கும் டெல்ரா வைரஸ்- சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 02 23:02
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 02 23:34
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கையில் கொவிட் மற்றும் டெல்ரா வைரஸ் போன்ற பல திரிபுகள் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் கேமந்த கேரத் தெரிவித்துள்ளார். நேற்று முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொது இடங்களில் மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார். தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான படுக்கை வசதிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வைத்தியர் கேமந்த கேரத் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
 
அதேவேளை, நாட்டை முழுமையாகத் திறந்துவிட முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டெல்ரா வைரஸ் வேகமாகப் பரவுவதால் சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாமெனவும் அவர் கேட்டுள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இணையவழிக் கூட்டமொன்றில் கருத்து வெளியிட்ட அவர், தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் காலம் தாழ்த்தி ஆரம்பித்ததால் நோய்ப்பரவல் அதிகரித்ததாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாமெனவும் கடினமாக மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும் இலங்கை மருத்துவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.