இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல, மக்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றார். அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் கட்டுப்பாடாக வீடுகளில் இருக்க வேண்டுமெனவும் அவர் இன்றிரவு இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டார்.
இதேவேளை. கொழும்பு, கம்பகா மாவட்டங்களுக்கு அடுத்ததாக யாழ்ப்பாணம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு கம்பகா ஆகிய மாவட்டங்களுக்கு வந்து செல்லும் அனுமதி பெற்ற வாகனங்களின் வருகையைக் குறைக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை 194 பேரும் நேற்றுப் புதன்கிழமை 215 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களில் 409 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.