அரசதரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் விவாதத்தில் பங்குபற்றி உரையாற்றினர். அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றும் நோக்கில் ஜனாதிபதிக்கு அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் குற்றம் சுமத்தியிருந்தனர்.
கொவிட் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டம் அவசியமற்றதெனவும், எதிர்க்கட்சிகளின் அரசியல் ரீதியான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவே இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் காரசாரமாகக் கூறினார்.
இலங்கைத்தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரத்தில் 180 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.