பெண்கள் பயன்படுத்தும் காப்புகள் மற்றும் இரண்டு தங்க மோதிரங்களும் எலும்புக்கூடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ச தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா குழுவினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே அடையாளமிடப்பட்டிருந்த பகுதிகளில் இருந்த எலும்புக்கூடுகள் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. விற்பனை நிலைய கட்டத்தின் வளாகப் பகுதியின் நுழைவுப் பகுதியிலேயே அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.
வுிற்பனை நிலைய வளாகத்தின் நாடுவில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் இருந்து சிறிய தூரத்தில் உள்ள நடைபாதையில், ஐந்து அடி ஆழத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்தில் இருந்தும் மனித எலும்புகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து தாய் மற்றும் குழந்தையின் எலும்புக் கூடுகள் கடந்த வாரம் மீட்கப்பட்டிருந்தன.
முதிர்ந்த ஒருவரின் எலும்புக் கூட்டுடன் ஒட்டியிருந்த களிமணல்களை அகற்றியபோது குழந்தைப் பிள்ளையின் சிறிய எலும்புக்கூடு ஒன்றும் இணைந்து காணப்பட்டது.
அதேவேளை,மனிதப் புதைகுழியில் சடலங்கள் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை என்பதை மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் இருந்து அறிய முடிவதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்திருந்தார்.
அவசர அவசரமாக சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்திருந்தார். இவர் எலும்புகளை ஆய்வு செய்யும் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.