ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திவிட்டு அரசாங்கம் மறைமுகமாக வர்த்தக நிலையங்களைப் பின்கதவால் திறப்பதற்கு அனுமதிப்பதால் கொவிட் நோய்த் தொற்று அதிகரிக்குமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
அதேவேளை, மதுபானச்சாலைகள் அதிகாரபூர்வமற்ற முறையில் திறப்பதற்கு அனுமதியளித்தமை குறித்து இலங்கை மருத்துவர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளினால் நோய்த் தொற்று அதிகரிக்குமெனவும் அது சமூகத் தொற்றாக மாற்றமடையும் ஆபத்து உள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரட்ன செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
நோய்த் தொற்றினால் மரணிப்போரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு நூற்றுக்கும் அதிகமாகவுள்ளது. இது குறித்துச் சுகாதார அமைச்சு மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரித்துமுள்ளது.