ஆனாலும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படலாமென வெளியான அறிவிப்புத் தொடர்பாகக் கவனம் செலுத்தித் தேவாலயங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நீதிகோரும் குழுவின் தலைவர் அருட்தந்தை சிறில் காமனி பேராயர் இல்லத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாமென பொதுபல சேனவின் செயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அருட்தந்தை சிறில் காமனி, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்தும் முன்கூட்டியே வெளியான எச்சரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லையெனவும் குற்றம் சுமத்தினார்.
உரிய பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கம் பேராயர் இல்லத்திற்கு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் இல்லையேல் அனைத்துத் தேவாலயங்களும் மூடப்பட வேண்டிய நிலை உருவாகுமெனவும் அருட்தந்தை சிறில் காமனி எச்சரிக்கை விடுத்தார்.