இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியவர்களே செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பொது இடங்களில் நடமாட முடியுமென ஏற்கனளவே அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இவ்வாறான சட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாதென சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏனைய புதி விதிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து படைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட் நோய் அல்லாத மரணச் சடங்குகளில் 24 பேர் கலந்துகொள்ள முடியுமெனவும் திருமணம் பதிவுத் திருமணங்களில் 25 பேர் பங்குபற்றலாமெனவும் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் வேறு புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுமெனவும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.